News September 28, 2025

திருச்சி: மது குடிக்க பணம் தராததால் தற்கொலை

image

குழுமணி அகரஹாரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (44). இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுகுடிக்க தன் மனைவியிடம் செல்வராஜ் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததால் மனம் உடைந்த அவர், வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 15, 2026

திருச்சி: தோஷங்கள் தீர்க்கும் கோயில்!

image

திருச்சி, லால்குடி அடுத்த மாந்துறையில் ஆம்ரவனேசுவரர் கோயில் உள்ளது. சிவபெருமானின் முடி கண்டதாக பொய்யுரைத்த பிரமன் இத்தலத்தில் தவமியற்றி தனது பாவத்தை போக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் வழிபட்டால் திருமண தடை, தோஷங்கள், சாபங்கள் மற்றும் நாம் செய்த தவறுகளுக்கு மனம் திருந்தி மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 15, 2026

திருச்சி: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

திருச்சி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 15, 2026

நவல்பட்டு: துணை முதல்வரை வரவேற்ற ஆட்சியர்

image

திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் பூங்கொத்து வழங்கி வரவேற்பளித்தார். இந்நிகழ்வில் அரசு துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!