News September 28, 2025

விஜய் கூட்டத்தில் ஈரோடை சேர்ந்தவர் பலி

image

கரூரில் நேற்று நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவர்களில் 34 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆவுடையார்பாளயம் காந்திநகர் துரைசாமி மகன் சதீஷ்குமார் வயது 34 என தகவல் வெளியாகியுள்ளது. இது ஈரோடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 12, 2026

ஈரோடு அருகே ஆண் சடலம்! திடுக்கிடும் தகவல்

image

தமிழக – கர்நாடக எல்லையான காரைக்காடு காவேரி ஆற்றங்கரையில், பாதி எரிந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முல்சந்த்பால் என்பதும், சுற்றுலா வந்த இடத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததும் தெரியவந்தது. உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், உறவினர்கள் அங்கேயே உடலை எரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

News January 12, 2026

புஞ்சைப்புளியம்பட்டி: பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

image

புஞ்சைப்புளியம்பட்டி புதுரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாடிக்கொண்டிருந்த ஒரு கும்பலைப் பிடித்தனர். இது தொடர்பாக ரகு, சுரேஷ் பாபு, விஜயகுமார் மற்றும் ராமலிங்கம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

புஞ்சைப்புளியம்பட்டி: பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

image

புஞ்சைப்புளியம்பட்டி புதுரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாடிக்கொண்டிருந்த ஒரு கும்பலைப் பிடித்தனர். இது தொடர்பாக ரகு, சுரேஷ் பாபு, விஜயகுமார் மற்றும் ராமலிங்கம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!