News September 28, 2025

நாமக்கல்: விபத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்

image

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டி அள்ளாளபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி (70). விவசாயி. இவர் மொபட்டில் எரையம்பட்டி-வேலகவுண்டம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்த குப்புசாமியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News January 14, 2026

நாமக்கல்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

image

நாமக்கல் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>’கிளிக்’<<>> (அ) நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT

News January 14, 2026

நாமக்கல்-சேலம் சாலையில் பயங்கரம்!

image

நாமக்கல்-சேலம் சாலை, சாமிநகரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி குருநாதன் (70). இவர் தனது டூவீலரில் சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் குருநாதன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!