News September 28, 2025

கடலூர் அருகே வியாபாரி வீட்டில் குண்டு வீச்சு

image

பண்ருட்டி அருகே மாளிகம்பட்டை சேர்ந்தவர் முந்திரி வியாபாரி குருசாமி. இவரது 16 வயது மகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் 16 வயது சிறுவர்கள் 2 பேருடன் சேர்ந்து குருசாமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து கல்லூரி மாணவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Similar News

News January 18, 2026

கடலூர்: நடமாடும் உணவகம் அமைக்க மானியம்

image

தமிழக அரசின் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த தொழில் முனைவோருக்கு நடமாடும் உணவக (Food Truck) தொழில் அமைக்க அரசு சார்பில் ரூ.1,24,250 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு கடலூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அல்லது www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகவும். இதை ஷேர் செய்யவும்!

News January 18, 2026

கடலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 18, 2026

கடலூர்: இன்று தை அமாவாசை – இதை மறக்காதிங்க

image

தை அமாவாசையான இன்று, முன்னோர்களுக்கு உங்களால் இயன்றதை கொண்டு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களது பசி தாகம் தீர்ந்து வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம். இதனை செய்தால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கி, சுப காரியத்தின் தடைகள் விலகி, சொத்துகள் சுகம் கிடைக்கும், நோய் நோடிகள் அடையும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இன்று மாலை, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!