News September 28, 2025

ராணிப்பேட்டை: துணை வட்டாட்சியர்கள் மாற்றம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19 துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் சரஸ்வதி நெமிலி தலைமையிடத்து துணை வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெமிலி வட்ட வழங்கல் அலுவலர் வினோத் சோளிங்கர் தலைமை இடத்து துணை வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று 19 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News February 4, 2026

ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE IT!

News February 4, 2026

ராணிப்பேட்டையில் பேருந்தை சுத்துப்போட்ட மாணவர்கள்!

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வதி கிராமத்தில் நேற்று (பிப்.3) காலை 8 மணி அளவில் சாலையில் பாணாவரத்திலிருந்து நெமிலி வரை செல்லும் அரசு பேருந்து கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்களை ஏற்றாமல் சென்றது. இதனால் பள்ளிக்கு நேரமானதால் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News February 4, 2026

அரக்கோணத்தில் போலீசார் அதிரடி!

image

அரக்கோணம் அருகே செங்கல்சூளையில் 4 குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோட்டாட்சியர் ரமேஷ் நேற்று (பிப்.3) நேரில் சென்று சோதனை மேற்கொண்டார். இதில் மின்னல் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் பணிபுரித்த 14 மற்றும் 17 வயது சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!