News September 28, 2025

திண்டுக்கல்: கணவரை எரித்துக் கொன்ற மனைவி

image

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே, கணவர் சுப்பையா (55) என்பவரை எரித்துக் கொன்ற மனைவி தனலட்சுமி (39), நாடகமாடிய பிறகு இன்று எரியோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்தக் கொலை சம்பவத்தில் தனலட்சுமியின் ஆண் நண்பரும் தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக எரியோடு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Similar News

News January 16, 2026

திண்டுக்கல்லில் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம் <<>>மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு(0451-2461828) அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News January 16, 2026

கொடைக்கானலில் தண்ணீர் டீசலா? உஷார் மக்களே

image

கொடைக்கானல்: பண்ணைக்காடு பேரூராட்சி ஊத்து பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிய சிறிது நேரத்திலேயே வாகனங்கள் பழுதாகி நின்றன. மெக்கானிக் மூலம் பரிசோதித்தபோது, டீசலில் அதிகளவு தண்ணீர் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. அடிக்கடி இதுபோன்று வாகனங்கள் பழுதாகி நிற்பதால், பெரும் நஷ்டம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிப்பதோடு, உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 16, 2026

நத்தம் கிரகணத்தால் மாறிய தேதி!

image

நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா தேதி சந்திரகிரகணம் முன்னிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி பிப்ரவரி 23-ம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றமும், 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா மார்ச் 10-ம் தேதியும் மறுநாள் 11-ம் தேதி பூப்பல்லக்கு நடைபெறும்.

error: Content is protected !!