News September 28, 2025
வேலூர்: தேர்வு TNPSC எழுதுவோர் கவனத்திற்கு!

வேலூர் மாவட்டத்தில், TNPSC சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு இன்று (செப்-28) நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை.தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு எழுத செல்வோருக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News January 16, 2026
வேலூர்: ஆட்டோவில் செல்வோர் கவனத்திற்கு!

வேலூரில் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். விதிமுறைபடி ஆட்டோக்கள் முதல் 1.8 கி.மீ க்கு ரூ.25ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 வசூலிக்கலாம். இரவு (11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால்<
News January 16, 2026
வேலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News January 16, 2026
வேலூர் மத்திய சிறைவாசிகளுக்கு சிறப்பு உணவு

வேலுார் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் பொங்கல் பண்டிகையின் போது, சிறைத் துறை சார்பில் சிறப்பு உணவு வகைகள் வழங்கப்படும். அதன்படி, நேற்று சிறைவாசிகளுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வெஜிடபிள் பிரியாணி, வடை ஆகிய சிறப்பு உணவு வகைகள் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


