News September 28, 2025
கிருஷ்ணகிரியில் இரட்டை கொலையால் அதிர்ச்சி

கிருஷ்ணகிரி பாஞ்சாலியூர் அருகே யாசின் நகர் பகுதியை சேர்ந்தவர் எல்லையம்மாள்(50). நேற்று முந்தினம் மாலை எல்லையம்மாள் வீட்டிற்கு அவரது தம்பி மனைவி சரோஜா சென்றார். அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் எல்லையம்மாள் (ம) அவரது மகள் சுசிதா(13) இருவரும் இரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 12, 2026
கிருஷ்ணகிரி: 12th போதும் – ரயில்வேயில் வேலை ரெடி!

இந்திய ரயில்வே துறையில் 8 பிரிவுகளின் கீழ் 312 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.29-க்குள் <
News January 12, 2026
கிருஷ்ணகிரி டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

பொங்கல் பண்டிகை மற்றும் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (ஜன.12) நடைபெற்றது. காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் சரவணன் முன்னிலையில், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் முரளி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள ஊர் கவுண்டர்கள் கலந்து கொண்டனர்.
News January 12, 2026
கிருஷ்ணகிரியில் சமுதாய வளைகாப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மத நல்லிணக்கத்தை நிலை நாட்டும் வகையில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று (ஜன.11) நடைபெற்றது. தேன்கனிக்-கோட்டை சப்தகிரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


