News September 28, 2025
WhatsApp-க்கு போட்டியாக வந்தது ‘ARATTAI’

வாஸ்ட்ஆப் வந்தபின், SMS மறந்தேவிட்டது. அந்த அளவுக்கு மக்களின் போன்களில் அது இடம்பிடித்துவிட்டது. இந்நிலையில், இந்தியாவின் ZOHO நிறுவனம் அரட்டை (Arattai) என்ற மெசேஜிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது. வீக் சிக்னலிலும் தடையின்றி செயல்படும், பேசிக் ஸ்மார்ட்போன்களில் கூட வேலை செய்யும், சிறந்த செயல்பாடு இதன் சிறப்பம்சங்களாக கூறப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய செயலியான இது, வாட்ஸ்ஆப்பை வெல்லுமா?
Similar News
News September 28, 2025
கரூர் கருப்பூர் ஆகிவிட்டது: வைரமுத்து

தாங்க முடியவில்லை, இரவு என்னால் தூங்க முடியவில்லை. மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ஒவ்வோர் உயிருக்கும் என் அஞ்சலி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரங்கல் எனக் கூறிய அவர், இனி இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்வதே நீண்ட துயரத்துக்கு நிவாரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 28, 2025
Just In: N.ஆனந்த், CTR நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக பொ.செ., N.ஆனந்த், CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது. குற்றமற்ற கொலை செய்ய முயற்சி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அலட்சிய செயல்களுக்கு தண்டனை, கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை ஆகிய 5 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
News September 28, 2025
கரூர் துயரத்தில் மரணித்த இளம்ஜோடி

கரூர் துயரத்தில் திருமணம் செய்யவிருந்த இளம் ஜோடி பூக்காமல் செடியிலேயே மரணத்திருக்கிறது. கோகுலஸ்ரீ – ஆகாஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடத்த நிலையில், வருங்கால மனைவியுடன் விஜய்யை பார்த்துட்டு வரேன்னு சொல்லிவிட்டு ஆகாஷ் கரூர் சென்று இருக்கிறார். பொண்ணு மாப்பிள்ளையாக ஜோடியாக சென்றவர்கள் திரும்பி வரவில்லை.