News September 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 472 ▶குறள்: ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
▶பொருள்: ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.
Similar News
News September 28, 2025
காவல்துறையினர் சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை: EPS

தவெக பரப்புரையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு, காவல்துறை முறையாக பாதுகாப்பு அளிக்காததே காரணம் என EPS குற்றம்சாட்டியுள்ளார். ஆளும் கட்சிகளின் கூட்டங்களுக்கு மட்டுமே முறையான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார். விஜய் நடத்திய மற்ற கூட்டங்களை பார்த்து அதற்கு ஏற்றார் போல, போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், துயரத்தை தடுத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 28, 2025
பெற்றோர்கள் கொஞ்சம் சிந்தித்திருந்தால்..

உலகம் அறியாத குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து சென்று, பறிகொடுத்து கதறி அழும் பெற்றோர்கள் ஒரு கணம் யோசித்திருந்தால், பெரும் துயரம் தவிர்க்கப்பட்டிருக்குமே. குழந்தைகளை அழைத்துவர வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டும், அதை பொருட்படுத்தவில்லை. ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையையும் தூக்கி சென்றுள்ளனர். கதறி அழும் நேரத்தில் இன்று மற்றவர்கள் ஆறுதல் கூறினாலும், வலி பெற்றோர்களுடையது தானே!
<<-se>>#karurstampede<<>>
News September 28, 2025
நெரிசலான சாலையை விஜய்க்கு ஒதுக்கியது ஏன்?

விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பரப்புரை செய்ய விஜய் தரப்பு போலீசிடம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால், அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், நெரிசலான மற்றும் அணுகுசாலை வசதியற்ற, வேலுச்சாமிபுரத்தை ஒதுக்கியதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒருவேளை ரவுண்டானா பகுதியில் பரப்புரை செய்ய காவல்துறை இடம் ஒதுக்கி இருந்தால் இந்த துயரம் நடந்து இருக்காது என்றும் கூறுகின்றனர்.