News September 28, 2025
அரசியல் கூட்டங்களில் ரத்த வெள்ளம்.. இனியாவது மாறுமா?

அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மக்களின் உயிரையும் தியாகம் செய்ய அரசியல் தலைவர்கள் தயங்குவதில்லை. மக்கள் மத்தியில் நாங்கள் மிகவும் பிரபலமானவர்கள்; எங்களுக்குத்தான் அதிக கூட்டம் வருகிறது என்பதை காட்ட, அரசியல் கட்சிகள் குறுகிய சாலைகளில் பெரும் கூட்டத்தை கூட்டுகின்றன. இதனால், பல உயிர்கள் பறிபோய், அவர்களின் குடும்பம் நிற்கதியற்று தவிக்கின்றன. கரூர் துயரத்திற்கு பிறகாவது இந்த நிலை மாறுமா என பார்ப்போம்.
Similar News
News September 28, 2025
என்று தனியும் இந்த சினிமா மோகம்? இயக்குநர் அமீர்

கரூரின் மரண ஓலத்தை சுட்டிக்காட்டி, உங்கள் அரசியல் விளையாட்டுக்கு அப்பாவி குழுந்தைகள் பலியா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். எத்தனை உயிர்களை காவு வாங்கி ஆட்சியில் அமர்வீர்கள் என கேட்ட அவர், என்று தனியும் இந்த சினிமா மோகம் எனவும் வேதனைப்பட்டுள்ளார். கரூரில் உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 28, 2025
உயிரிழந்த மகனுக்கு தாய் கடைசி முத்தம்.. கண்ணீர் PHOTO

கரூர் துயரத்தில் இறந்த தனது மகனை கட்டிப்பிடித்து கடைசியாக தாய் முத்தமிட்ட காட்சி பார்ப்பவர்களை சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்த்தியது. பிள்ளையை பறிகொடுத்துவிட்டு, நெஞ்சில் அடித்துக் கொண்டு தவிக்கும் அந்த ஏழை தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்வது, யார் ஆறுதல் சொல்வது. கொள்ளி வைக்க வேண்டிய பிள்ளைக்கு, ஒரு தாய் கொள்ளிவைப்பது போன்ற பெரும் துயரம் யாருக்கும் வரக்கூடாது. இதுபோன்ற சம்பவம் இனி நிகழவும் கூடாது.
News September 28, 2025
மூட்டு வலியை விரட்டும் மூலிகை தேநீர்!

மூட்டு வலியைப் போக்கவும், வாத நோய்களைக் கட்டுப்படுத்தவும் முடக்கத்தான் கீரை டீ உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். *முடக்கத்தான் கீரையை நன்றாகக் கழுவி, நீரில் கொதிக்க வைக்கவும் *இதில் மிளகு & சீரகத்தையும் சேர்த்துக் கொதிக்க விடலாம் * 3-5 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு, பின்னர் வடிகட்டி தேவைப்பட்டால் தேன் கலந்து பருகலாம். SHARE IT.