News September 28, 2025

விவரிக்க முடியா துயரில் உள்ளேன்: ஸ்டாலின்

image

கரூர் அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்களுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த CM ஸ்டாலின் விபரிக்க முடியாத துயரத்தில் உள்ளதாக கூறினார். அரசியல் கட்சிக் கூட்டத்தில் இதுவரை இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறவில்லை என கூறிய அவர் இனிமேலும் இதுபோல் நடக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டார். காயமடைந்தவர் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை எனவும் தெரிவித்தார்

Similar News

News September 28, 2025

என்று தனியும் இந்த சினிமா மோகம்? இயக்குநர் அமீர்

image

கரூரின் மரண ஓலத்தை சுட்டிக்காட்டி, உங்கள் அரசியல் விளையாட்டுக்கு அப்பாவி குழுந்தைகள் பலியா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். எத்தனை உயிர்களை காவு வாங்கி ஆட்சியில் அமர்வீர்கள் என கேட்ட அவர், என்று தனியும் இந்த சினிமா மோகம் எனவும் வேதனைப்பட்டுள்ளார். கரூரில் உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 28, 2025

உயிரிழந்த மகனுக்கு தாய் கடைசி முத்தம்.. கண்ணீர் PHOTO

image

கரூர் துயரத்தில் இறந்த தனது மகனை கட்டிப்பிடித்து கடைசியாக தாய் முத்தமிட்ட காட்சி பார்ப்பவர்களை சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்த்தியது. பிள்ளையை பறிகொடுத்துவிட்டு, நெஞ்சில் அடித்துக் கொண்டு தவிக்கும் அந்த ஏழை தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்வது, யார் ஆறுதல் சொல்வது. கொள்ளி வைக்க வேண்டிய பிள்ளைக்கு, ஒரு தாய் கொள்ளிவைப்பது போன்ற பெரும் துயரம் யாருக்கும் வரக்கூடாது. இதுபோன்ற சம்பவம் இனி நிகழவும் கூடாது.

News September 28, 2025

மூட்டு வலியை விரட்டும் மூலிகை தேநீர்!

image

மூட்டு வலியைப் போக்கவும், வாத நோய்களைக் கட்டுப்படுத்தவும் முடக்கத்தான் கீரை டீ உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். *முடக்கத்தான் கீரையை நன்றாகக் கழுவி, நீரில் கொதிக்க வைக்கவும் *இதில் மிளகு & சீரகத்தையும் சேர்த்துக் கொதிக்க விடலாம் * 3-5 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு, பின்னர் வடிகட்டி தேவைப்பட்டால் தேன் கலந்து பருகலாம். SHARE IT.

error: Content is protected !!