News September 28, 2025
நெரிசலான இடத்தை ஒதுக்கியது ஏன்? அதிமுக

விசாலமான கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில் விஜய்க்கு, அதிமுகவுக்கு போலீஸ் அனுமதியளிக்கவில்லை என அதிமுக MP இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார். நெரிசலான வேலுசாமிபுரத்தை எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இடவசதியுள்ள ரவுண்டானா பகுதியில் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி எனவும் கேட்டுள்ளார்.
Similar News
News September 28, 2025
உயிரிழந்த மகனுக்கு தாய் கடைசி முத்தம்.. கண்ணீர் PHOTO

கரூர் துயரத்தில் இறந்த தனது மகனை கட்டிப்பிடித்து கடைசியாக தாய் முத்தமிட்ட காட்சி பார்ப்பவர்களை சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்த்தியது. பிள்ளையை பறிகொடுத்துவிட்டு, நெஞ்சில் அடித்துக் கொண்டு தவிக்கும் அந்த ஏழை தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்வது, யார் ஆறுதல் சொல்வது. கொள்ளி வைக்க வேண்டிய பிள்ளைக்கு, ஒரு தாய் கொள்ளிவைப்பது போன்ற பெரும் துயரம் யாருக்கும் வரக்கூடாது. இதுபோன்ற சம்பவம் இனி நிகழவும் கூடாது.
News September 28, 2025
மூட்டு வலியை விரட்டும் மூலிகை தேநீர்!

மூட்டு வலியைப் போக்கவும், வாத நோய்களைக் கட்டுப்படுத்தவும் முடக்கத்தான் கீரை டீ உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். *முடக்கத்தான் கீரையை நன்றாகக் கழுவி, நீரில் கொதிக்க வைக்கவும் *இதில் மிளகு & சீரகத்தையும் சேர்த்துக் கொதிக்க விடலாம் * 3-5 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு, பின்னர் வடிகட்டி தேவைப்பட்டால் தேன் கலந்து பருகலாம். SHARE IT.
News September 28, 2025
இது போன்று இன்னும் பல உயிர்களும்..

மரணமடைந்தவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழும் ஓலம்தான் தமிழ்நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் கவனிக்கவே படாமல், கால் மிதிகளில் சிக்கி, குப்பைகளுக்கு மத்தியில் உயிரிழந்து கிடக்கும் பூனை ஒன்றின் பரிதாப நிலை, மனதை உலுக்குகிறது. இது போன்று இன்னும் பல வாயில்லா ஜீவன்களும் உயிரை இழந்திருக்கலாம்.
<<-se>>#karurstampede<<>>