News September 28, 2025
கரூர் கூட்ட நெரிசல்: 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 38 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தவெகவின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, மரணம் விளைவிக்கும் செயல் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகள் கீழ் அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மேலும் மதியழகனிடம் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
Similar News
News January 12, 2026
ALERT! உங்கள் ஆதார் Misuse ஆகுதா?

உங்கள் ஆதாரை வேறு யாராவது உங்களுக்கு தெரியாமல் யூஸ் பண்றாங்களா என்பதை எளிதாக கண்காணிக்கலாம். ➤myAadhaar போர்ட்டலுக்கு செல்லுங்கள் ➤ஆதார் எண் & OTP-ஐ உள்ளிட்டு Login செய்யுங்கள் ➤அதில் Authentication history ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்கள் ➤இதில் நீங்கள் எங்கெல்லாம் உங்கள் ஆதாரை யூஸ் பண்ணியிருக்கீங்க என்பதை தெரிஞ்சிக்கலாம் ➤முறைகேடு நடந்திருப்பதாக உணர்ந்தால் 1947 என்ற எண்ணில் புகாரளியுங்கள். SHARE.
News January 12, 2026
BIG BREAKING: இந்திய நாடே சோகத்தில் ஆழ்ந்தது

இஸ்ரோவின் இந்த ஆண்டின் முதல் ராக்கெட் லாஞ்ச் தோல்வியை சந்தித்துள்ளதால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது. இன்று காலை 10.17 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சீறிப்பாய்ந்தது PSLV C-62 ராக்கெட். ‘EOS-N1 Anvesha’ செயற்கைகோள் ஏந்திச் சென்ற இது 3வது ஸ்டேஜில் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கெனவே 2025 மே மாதத்தில் அனுப்பப்பட்ட PSLV C 61 ராக்கெட்டும் 3-வது ஸ்டேஜில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
News January 12, 2026
இதயத்தை Bag-ல் சுமந்து வாழும் அதிசய பெண்!

2017 முதல் இதயம் இல்லாமல் ஒரு பெண் வாழ்கிறார் தெரியுமா? இங்கிலாந்தை சேர்ந்த செல்வா ஹுசைன்(39), Dilated Cardiomyopathy நோயால் பாதிக்கப்பட, அவரின் இதயம் செயலிழந்துள்ளது. இதனால், அவருக்கு செயற்கையாக Mechanical Heart Pump ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. 6 கிலோ எடை கொண்ட செயற்கை இதயத்தை Bag-ல் மாட்டியபடி குடும்பம், பிள்ளைகள் என அனைத்தையும் சாதாரணமாகவே இப்பெண் தொடர்கிறார். மருத்துவத்தின் அதிசயமே!


