News September 28, 2025

இழப்பீட்டை ₹50 லட்சமாக உயர்த்த திருமா வலியுறுத்தல்

image

கரூர் அசம்பாவிதத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். போர்கால அடிப்படையில் காயம் அடைந்தவர்களுக்கு சிசிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உயிரிழந்தோருக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ₹10 லட்சம் இழப்பீட்டை, ₹50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 28, 2025

விஜய் கைதாவாரா? CM ஸ்டாலின் விளக்கம்

image

கரூர் பரப்புரை கூட்டத்தில் குழந்தைகள் உட்பட 39 பேரின் உயிர்கள் பறிபோன நிலையில், விஜய் கைது செய்யப்படுவாரா என CM ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் விளக்கம் அளித்தார். மேலும், உங்களின் யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என சொல்லிவிட்டு அங்கிருந்த சென்றார்.

News September 28, 2025

அரசியல் கூட்டங்களில் ரத்த வெள்ளம்.. இனியாவது மாறுமா?

image

அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மக்களின் உயிரையும் தியாகம் செய்ய அரசியல் தலைவர்கள் தயங்குவதில்லை. மக்கள் மத்தியில் நாங்கள் மிகவும் பிரபலமானவர்கள்; எங்களுக்குத்தான் அதிக கூட்டம் வருகிறது என்பதை காட்ட, அரசியல் கட்சிகள் குறுகிய சாலைகளில் பெரும் கூட்டத்தை கூட்டுகின்றன. இதனால், பல உயிர்கள் பறிபோய், அவர்களின் குடும்பம் நிற்கதியற்று தவிக்கின்றன. கரூர் துயரத்திற்கு பிறகாவது இந்த நிலை மாறுமா என பார்ப்போம்.

News September 28, 2025

விவரிக்க முடியா துயரில் உள்ளேன்: ஸ்டாலின்

image

கரூர் அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்களுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த CM ஸ்டாலின் விபரிக்க முடியாத துயரத்தில் உள்ளதாக கூறினார். அரசியல் கட்சிக் கூட்டத்தில் இதுவரை இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறவில்லை என கூறிய அவர் இனிமேலும் இதுபோல் நடக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டார். காயமடைந்தவர் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை எனவும் தெரிவித்தார்

error: Content is protected !!