News September 28, 2025
தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

கரூரில் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதனிடையே இதுதொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10,000 பேரே கூடுவார்கள் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், 500 காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு பணிக்கு அனுப்பியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 28, 2025
நெரிசலான இடத்தை ஒதுக்கியது ஏன்? அதிமுக

விசாலமான கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில் விஜய்க்கு, அதிமுகவுக்கு போலீஸ் அனுமதியளிக்கவில்லை என அதிமுக MP இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார். நெரிசலான வேலுசாமிபுரத்தை எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இடவசதியுள்ள ரவுண்டானா பகுதியில் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி எனவும் கேட்டுள்ளார்.
News September 28, 2025
BREAKING: உயிரிழந்தோர் உடல்களுக்கு ஸ்டாலின் அஞ்சலி

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் உடல்கள் கரூர் மருத்துவமனையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து இரவோடு இரவாக கரூர் சென்ற ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதன்பின் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
News September 28, 2025
விஜய்யை கைது செய்யுங்கள்: நடிகை ஓவியா

விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில் நடிகை ஓவியா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ‘ARREST VIJAY’ என பதிவிட்டுள்ளார். ‘அமாம் விஜயை கைது செய்ய வேண்டும்.. விஜய்யை மட்டும் குற்றம்சாட்டுவது தவறு..’ என ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.