News September 28, 2025

தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

image

கரூரில் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதனிடையே இதுதொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10,000 பேரே கூடுவார்கள் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், 500 காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு பணிக்கு அனுப்பியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 14, 2026

ஹார்ட் அட்டாக்கை தடுக்க செலவில்லாத ஈஸி வழி

image

மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்க சிறந்த வழி, சரியான தூங்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பது தான் என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள். *காலையில் ஒழுங்காக எழுந்திருப்பது *தினசரி இரவில் 7-8 மணிநேரம் தூக்கம் *பகல் தூக்கத்தை குறைப்பது (அ) தவிர்ப்பது *தூக்கமின்மை பிரச்னைகளை சரிசெய்வது… இவற்றை ஒழுங்காக கடைப்பிடித்தாலே, இதய நோய்கள் வரும் வாய்ப்பை 42% குறைக்கலாம் என ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News January 14, 2026

கவனம்.. இருமல் மருந்துக்கு தடை

image

ம.பி.,யில் Coldrif இருமல் மருந்தை குடித்த 22 குழந்தைகள் உயிரிழந்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘அல்மாண்ட் கிட் சிரப்’ மருந்துக்கு புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. இதில் சிறுநீரகத்தை பாதிக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ அதிகமாக இருப்பது தெரிய வந்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை பிஹாரில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. BE ALERT.

News January 14, 2026

சற்றுமுன்: ₹5,000 ஆக உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு

image

பொங்கல் பரிசாக பல்வேறு அறிவிப்புகளை <<18854282>>தமிழக அரசு<<>> அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றும் பகுதிநேர மகப்பேறு பணியாளர்களுக்கு (RCH) வழங்கப்பட்டு வரும் ₹1,500 மாத சம்பளம் ₹5,000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணை ஜன.19-ல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!