News April 14, 2024
தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு மாற்றத்தை உருவாக்கும்

மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு நிச்சயமாக நாட்டில் அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், “வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத மிகப்பெரும் அச்சுறுத்தலில் இந்தியா உள்ளது. ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்க தேசத்திற்கு வழி்காட்டக்கூடிய வகையில் தமிழக மக்களின் தீர்ப்பு இருக்கும்” என்றார்.
Similar News
News November 5, 2025
40 நாள்களுக்கு ஒரு போர்க்கப்பல்: கடற்படை தளபதி

ஒவ்வொரு 40 நாள்களுக்கும், ஒரு போர்க்கப்பல் அல்லது நீர்மூழ்கி கப்பல், படையில் சேர்க்கப்படுவதாக கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். 2035-க்குள் 200-க்கும் மேற்பட்ட போர் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கடற்படையில் சேர்ப்பதே இலக்கு எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போதைய நிலவரப்படி, கடற்படையில் 142 போர் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 5, 2025
இந்தியா ஒரு சூப்பர்பவர் நாடு: இஸ்ரேல் அமைச்சர்

இந்தியா ஒரு சூப்பர்பவர் நாடு என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியான் சார் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, கண்டுபிடிப்பு, தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம் என முன்னெப்போதும் இல்லாததை விட இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்புறவு வலுப்பெற்று வருவதாகவும், அவர் கூறியுள்ளார். மேலும், ஹமாஸின் கொடூர தாக்குதலின் போது PM மோடி முதல் ஆளாக போன் செய்து ஆறுதல் கூறியதை என்றும் மறக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.


