News September 28, 2025
சரமாரியாக குற்றம்சாட்டிய பெண்கள்

கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 40க்கும் மேற்பட்டோர் சிசிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பாக, அதிகமான மக்கள் கூடுவார்கள் என தெரிந்தும், குறுகிய இடத்தை தந்தது ஏன்? மின்சாரம் நிறுத்தப்பட்டது ஏன்? என்று கேட்ட பெண்கள், போதிய பாதுகாப்பு இல்லாததே, உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றம்சாட்டினர்.
Similar News
News January 15, 2026
BIG BREAKING: ஜன நாயகன்.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரிய வழக்கை விசாரிக்க SC மறுத்துள்ளது. U/A சான்றிதழ் வழங்கக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து, படக்குழு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த SC, சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், ஜன.20-ம் தேதி சென்சார் விவகாரத்தில் ஐகோர்ட் விசாரித்து முடிவெடுக்கவும் ஆணையிட்டுள்ளது.
News January 15, 2026
2 நிமிடங்களில் டிரைவிங் லைசன்சில் நம்பர் மாற்றலாம்

➤https://sarathi.parivahan.gov.in/ -க்கு சென்று Online Services & Driving License Related Services ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤உங்கள் மாநிலத்தை தேர்வு செய்யுங்கள் ➤பிறகு Other Menu என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், Mobile Number Update என காட்டும் ➤அதை க்ளிக் செய்து லைசன்ஸ் தொடர்பான விவரங்களை உள்ளிடுங்கள் ➤புதிய மொபைல் நம்பரை Type செய்தால் உடனடியாக அப்டேட் ஆகிவிடும். SHARE பண்ணுங்க.
News January 15, 2026
NIA-க்கு புதிய தலைவர் நியமனம்!

NIA-ன் தலைவராக மூத்த IPS அதிகாரி ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 1994 இமாச்சல பிரதேச கேடர் IPS அதிகாரியான இவர், கடந்த ஆண்டு டிசம்பரில் NIA-ன் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது, முழுநேர தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவர் பணி ஓய்வுபெறும் ஆக.31, 2028 வரை இந்த பதவியில் நீடிப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


