News September 28, 2025
சென்னையில் இருந்து கரூர் புறப்பட்டார் EPS

கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் கரூர் விரைந்துள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் இருந்து கரூர் விரைந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
Similar News
News January 13, 2026
சென்னை மாநகராட்சி – தொழில் உரிமம் புதுப்பிப்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வர்த்தகம் செய்ய வணிகர்கள் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி தொழில் உரிமம் பெற உரிமக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே புதுப்பிக்க வேண்டும். தொழில் உரிமம் புதுப்பிக்க, நிலுவையின்றி தொழில் வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஏற்கனவே பெறப்பட்ட உரிமத்தின் நகல் மற்றும் கட்டணம் அவசியம் என தெரிவித்துள்ளது.
News January 13, 2026
சென்னை: முற்றிலும் இலவசம்… செம வாய்ப்பு

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை (044-25264568) தொடர்பு கொள்ளுங்கள்.*செம திட்டம். நண்பர்களுக்கு பகிரவும்*
News January 13, 2026
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

சென்னையில் நாளையும் (ஜன-14) ம் தேதி பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே இதுவரை இந்த பொங்கள் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் நாளைய தினம் அந்தந்த ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயண்டுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


