News September 28, 2025
10,000 பேருக்கு அனுமதி கேட்டு பல ஆயிரம் கூடிய அவலம்

கரூர் விஜய் பரப்புரையில் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பான வீடியோக்கள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன. அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் அலறித் துடிப்பது துயரம் மிகுந்த அவலமாக மாறியுள்ளது. விஜய்யின் கடந்த பரப்புரையின் போதே அனுமதி கோரிய அளவை விட அதிக எண்ணிக்கையில் தான் மக்கள் கூடினர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இன்றைய கரூர் பரப்புரைக்கும், 10,000 பேர் கூடுவார்கள் என தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
நீங்க எப்படி? மறந்துட்டு தேடுவீங்களா?

வண்டி சாவி, போன் என எதையாவது எங்கேயாவது வைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் பலர் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் அதிக படைப்பாற்றல் மிக்கவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எப்போதும் மனதில் கற்பனை, கிரியேட்டிவிட்டி, ஐடியாக்கள் ஓடிக் கொண்டிருப்பதால் அவர்களால் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் போகிறதாம். சின்ன சின்ன விஷயங்களை மறப்பது குறைபாடல்ல, சக்திவாய்ந்த திறன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
திராவிட பொங்கல் Vs இந்துக்களின் விழா!

பொங்கல் பண்டிகையை ‘திராவிட பொங்கலாக’ கொண்டாட ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, பொங்கல் ‘இந்துக்களின் விழா’ என்றும், பொங்கலில் உள்ள இந்து அடையாளங்களை நீக்க திமுக சதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியது. அதிமுகவும், ‘அரசியல் நாடகம்’ என விமர்சித்த நிலையில், ஸ்டாலினின் அழைப்பு கட்சி தொண்டர்களுக்கானது; பொதுமக்களுக்கானது அல்ல என்று திமுக விளக்கமளித்துள்ளது.
News January 14, 2026
உயிருடன் இருப்பவர்கள் ‘கொலை’: மம்தா

மேற்கு வங்கத்தில் SIR நடவடிக்கை மூலம் 54 லட்சம் உண்மையான வாக்காளர்களை ECI தன்னிச்சையாக நீக்கியுள்ளதாக மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவால் உருவாக்கப்பட்ட AI டெக்னாலஜியை பயன்படுத்தி, உயிருடன் இருக்கும் பல வாக்காளர்களை ECI ‘கொலை’ செய்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரை பயன்படுத்திய பெண்களின் பெயரையும் நீக்கி அதிகாரதுஸ்பிரயோகம் செய்துள்ளதாக சாடியுள்ளார்.


