News September 28, 2025

கரூர் துயரம்: ராகுல் காந்தி இரங்கல்

image

கரூர் துயர செய்தியை கேட்டு, மிகுந்த மனவேதனை அடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் கூறிய அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் நிர்வாகிகளை தேவையான உதவிகளை செய்யவும் ராகுல் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News September 28, 2025

கரூர் பெரும் துயரம்.. 2 குடும்பமே அழிந்தது

image

விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதில், கரூர் அருகேயுள்ள ஏமூர் புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய், மகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஹேமலதா மற்றும் மகள்கள் சாய் லக்‌ஷனா, சாய் ஜீவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

News September 28, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 28, புரட்டாசி 12 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்:8:00 AM – 9:00 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM &
1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை

News September 28, 2025

யாருக்காக மாய்கின்றன இந்த உயிர்கள்?

image

நட்சத்திரங்கள் தங்கள் செல்வாக்கை காட்ட கூட்டும் கூட்டத்தில் அப்பாவி ரசிகர்கள் பலியாகின்றனர். அரசியல்வாதிகளின் பலத்தை காட்ட, அப்பாவி தொண்டர்கள் பலியாகின்றனர். சிலரின் லாபங்களுக்காக பல அப்பாவி குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். கரூரின் குறுகிய சாலைக்குள் பல்லாயிரம் பேரை கூட்டியது தவறென்றால், இவ்வளவு பெரும் கூட்டத்துக்கு சிறு சாலையில் அனுமதி அளித்ததும் தவறுதானே? இதற்கெல்லாம் முடிவு எப்போது?

error: Content is protected !!