News September 27, 2025
கரூர் துயரம்: முன்பே கணித்த ஆனந்த்

தமிழகத்தில் 50 இளைஞர்கள் உயிரிழக்கும் அளவுக்கு நெரிசல் விபத்து நேரிடும் என 2 வாரங்களுக்கு முன்பே ஒருவர் கணித்தது, தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. X-ல் ஆனந்த் (@arathu1702) என்பவர் செப்.13-ம் தேதி பதிவில், மூளையற்ற விஜய்யின் ரசிகர்கள் திமுகவினரை விட மோசமானவர்கள். குறைந்தது 50 பேர் பலியாகும் அளவுக்கு விஜய்யால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்று அவர் விமர்சித்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து?
Similar News
News September 28, 2025
கரூர் துயரம்: உதவி எண்கள் அறிவிப்பு

தவெக கூட்டத்தில் நடைபெற்ற துயரத்தால், இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறிய, அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 04324-256306, 7010806322 உள்ளிட்ட எண்கள் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளன. கூட்டத்தில் குழந்தைகள் சிலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
News September 28, 2025
கரூர் கூட்ட நெரிசல்: 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 38 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தவெகவின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, மரணம் விளைவிக்கும் செயல் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகள் கீழ் அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மேலும் மதியழகனிடம் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
News September 28, 2025
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய் துணை நிற்பார்: தவெக

கரூரில் ஏற்பட்ட துயரத்தால் விஜய் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக தவெகவின் வழக்கறிஞர் அணி தலைவர் அறிவழகன் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய்யும், தவெகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் ஆலோசித்து முடிவெடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.