News September 27, 2025
கரூர் துயரம்: முன்பே கணித்த ஆனந்த்

தமிழகத்தில் 50 இளைஞர்கள் உயிரிழக்கும் அளவுக்கு நெரிசல் விபத்து நேரிடும் என 2 வாரங்களுக்கு முன்பே ஒருவர் கணித்தது, தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. X-ல் ஆனந்த் (@arathu1702) என்பவர் செப்.13-ம் தேதி பதிவில், மூளையற்ற விஜய்யின் ரசிகர்கள் திமுகவினரை விட மோசமானவர்கள். குறைந்தது 50 பேர் பலியாகும் அளவுக்கு விஜய்யால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்று அவர் விமர்சித்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து?
Similar News
News January 19, 2026
மகாத்மா காந்தி பொன்மொழிகள்

*நீ உலகில் காண விரும்பும் மாற்றமாக நீயே மாறு. *அஹிம்சை என்பது மனிதகுலத்திற்கு கிடைத்த மிகப் பெரிய சக்தி. *எதிரியை அழிப்பதற்கு அல்ல, அவரது மனதை மாற்றுவதற்கே போராடு. *சுதந்திரம் என்பது விரும்பியதை செய்வது அல்ல; சரியானதை செய்வதே. *ஒரு தேசத்தின் முன்னேற்றம், அது பெண்களை எப்படி நடத்துகிறது என்பதிலே தெரியும்
News January 19, 2026
திருப்திப்படுத்துவது கோர்ட்டின் கடமை அல்ல: சந்திரசூட்

திருப்திப்படுத்துவது அல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் சமநிலையைப் பாதுகாப்பதே கோர்ட்டின் கடமை என உமர்காலித் குறித்த கேள்விக்கு Ex SC தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். மேலும் UAPA போன்ற கடும் சட்டங்கள் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என விமர்சித்துள்ளார். டெல்லி கலவர வழக்கில் கைதான இமாம் & உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News January 19, 2026
அந்த 88 மணி நேரம்.. நினைவுகூர்ந்த ராஜ்நாத்

நாக்பூரில் ஒரு வெடிமருந்து ஆலை திறப்பு விழாவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட நாகஸ்திரா ட்ரோனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் பார்வையிட்டார். அப்போது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை சுமார் 88 மணி நேரம் நீடித்தது, அப்போது எதிர்கொண்ட தீவிரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மறுபுறம், புதிய போர் முறைகள் உருவாகி வருகின்றன என்று கூறினார்.


