News September 27, 2025
கரூர் துயரம்: இபிஎஸ் இரங்கல்

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 33க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக இபிஎஸ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேரில் சென்று உதவி வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News January 13, 2026
திருச்சி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 13, 2026
OPS போன்றே கூட்டணி பற்றி பேசிய பிரேமலதா

கூட்டணி தொடர்பாக தேமுதிக மா.செ.க்களை மீண்டும் அழைத்து பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. கடலூர் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பை வெளியிடாமல் சஸ்பென்ஸ் வைத்தார். இதற்கு காரணம் ஏற்கெனவே, நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பலர் தவெக, சிலர் அதிமுக என விருப்பத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், OPS போன்றே தை பிறந்தால் வழி பிறக்கும் என பிரேமலதா கூறியுள்ளார்.
News January 13, 2026
உழவர்களின் கண்ணீர் CM-க்கு மகிழ்ச்சியா? அன்புமணி

திமுக ஆட்சியில் உழவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குவதாக CM ஸ்டாலினே கூறினால், அதை விடக் கொடுமையான கேலிக்கூத்து இருக்க முடியாது என அன்புமணி விமர்சித்துள்ளார். உழவர்களுக்கு தினமும் ₹30க்கும் குறைவாக மட்டுமே வருவாய் கிடைக்கிறது, ₹289.63 கோடி இழப்பீடு அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதா? உழவர்களின் கண்ணீர் CM-க்கு மகிழ்ச்சியாக தெரிகிறதா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பி கடுமையாக சாடியுள்ளார்


