News September 27, 2025

தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

image

தாம்பரம் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இம்மாதம் 28ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் இந்தரயில் மதியம் 12. 30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் திங்கட்கிழமை மதியம் 3:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில்மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவில்வந்து சேரும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

Similar News

News January 3, 2026

குமரி: கார் கண்ணாடியை உடைத்த நபரால் பரபரப்பு…

image

குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இன்று (ஜன.3) அதிகாலை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை பிடித்து மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News January 3, 2026

குமரி: ஆன்லைன் பண மோசடியால் வங்கி கணக்குகள் முடக்கம்..

image

குமரியில் பண மோசடி தொடர்பாக 2,89,83,656 ரூபாய் மோசடி நபர்களின் வங்கி கணக்குகள் சைபர் கிரைம் போலீசாரால் முடக்கப்பட்டுள்ளது. அதில் 1,53,29,516 ரூபாய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திரும்ப பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பொது அமைதியை கெடுக்கும் வகையில் அவதூறு பரப்புவோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குமரி காவல்துறை தெரிவித்துள்ளது.

News January 3, 2026

குமரி: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை ரெடி!

image

குமரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!