News September 27, 2025
BREAKING: கரூர்: விஜய் பரப்புரை.. 10 பேர் கவலைக்கிடம்?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் இன்று மாலை தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பரப்புரையில் தள்ளமுள்ளு காரணமாக ஏராளமானோர் மயக்கமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனை முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.
Similar News
News January 2, 2026
கரூர்: உங்கள் பகுதியில் கரண்ட் கட்டா! இனி Easy

கரூர் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News January 2, 2026
குளித்தலை: திமுக முக்கிய பிரமுகர் உயிரிழப்பு

குளித்தலை நகர திமுக 5-வது வட்ட செயலாளர் மற்றும் குளித்தலை நகர் மன்ற உறுப்பினர் செல்வம் இன்று உடல் நல குறைவால் இயற்கை எய்தினார். அவரது இறப்பிற்கு குளித்தலை எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர், குளித்தலை நகர திமுக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும் உழவர் சந்தை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News January 2, 2026
தான்தோன்றிமலை: வயிற்று வலியால் நேர்ந்த சோகம்

கரூர், தான்தோன்றிமலை அருகே வடமாநிலத்தை சேர்ந்த அகமது தூபி என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களாக வயிற்று வலியின் காரணமாக இருந்த நிலையில் நேற்று மன விரக்தியில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


