News September 27, 2025
செந்தில் பாலாஜியை அட்டாக் செய்த விஜய்

கரூரில் பிரச்சாரம் செய்த விஜய், செந்தில் பாலாஜியை மறைமுகமாக அட்டாக் செய்தார். கரூர், இந்திய அளவில் பிரபலமாக அவர் காரணமாக இருந்ததாக சாடினார். ED வழக்கில் அவர் சிறை சென்றது தேசிய அளவில் பேசப்பட்டதை மறைமுகமாக பேசியுள்ளார். மேலும், கரூரில் விமான நிலையம், பேரீச்சை உற்பத்தி வளர்ச்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் உள்ளதாக விமர்சித்தார்.
Similar News
News September 28, 2025
விஜய் இழப்பீடு வழங்க வேண்டும்: விஷால்

கரூரில் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்டநெரிசல் காரணமாக 38 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது என விஷால் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய்யின் தவெக கட்சி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வருங்காலங்களில் அரசியல் பேரணி நடத்தும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் விஷால் வலியுறுத்தியுள்ளார்.
News September 28, 2025
விஜய்க்கு வந்துள்ள சோதனை

கரூர் துயர நிகழ்வானது, விஜய்யை வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இது அவரது தலைமைத்துவத்துக்கு ஏற்பட்டுள்ள சோதனையாகவும் உள்ளது. இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் வெளிப்படையான, உறுதியான பதிலையும், விளக்கத்தையும் அளித்தாக வேண்டும். அதை செய்ய தவறும் நிலையில், அது விஜய் மீது நிரந்தர கறையாக மாறிவிட வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
News September 28, 2025
கரூர் துயரம் மிகுந்த வலியை தருகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

கரூர் துயரம் வேதனை அளிப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த அரசியல் பேரணி கூட்டத்தில் குழந்தைகள் உள்பட அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியை தருவதாக அவர், X-ல் பதிவிட்டுள்ளார். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன் எனவும் கவர்னர் கூறியுள்ளார்.