News September 27, 2025
உயரங்களை தொட்ட ப.சுப்பராயன்

1926-ல் அன்றைய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக நீதிக்கட்சி ஆதரவுடன் மெட்ராஸ் மாகாண முதல்வரானார் <<17848853>>ப.சுப்பராயன்<<>>. அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாகாண சட்டம் மற்றும் கல்வி அமைச்சர் (1937-39), உள்துறை & காவல்துறை அமைச்சர் (1947-48), திருச்செங்கோடு எம்பி (1957-62), மத்திய போக்குவரத்து அமைச்சர் (1959-62), மகாராஷ்டிரா மாநில கவர்னர் (1962) பதவிகளை வகித்துள்ளார். இவர் 1962-ல் காலமானார்.
Similar News
News September 28, 2025
ரத்த தானம் செய்யுங்கள்: தமிழிசை வேண்டுகோள்

கரூர் துயர சம்பவம் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக தமிழிசை, தன் x பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், அனைவரும் ரத்த தானம் செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், சிகிச்சையில் உள்ளவர்கள் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 28, 2025
சரமாரியாக குற்றம்சாட்டிய பெண்கள்

கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 40க்கும் மேற்பட்டோர் சிசிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பாக, அதிகமான மக்கள் கூடுவார்கள் என தெரிந்தும், குறுகிய இடத்தை தந்தது ஏன்? மின்சாரம் நிறுத்தப்பட்டது ஏன்? என்று கேட்ட பெண்கள், போதிய பாதுகாப்பு இல்லாததே, உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றம்சாட்டினர்.
News September 28, 2025
10,000 பேருக்கு அனுமதி கேட்டு பல ஆயிரம் கூடிய அவலம்

கரூர் விஜய் பரப்புரையில் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பான வீடியோக்கள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன. அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் அலறித் துடிப்பது துயரம் மிகுந்த அவலமாக மாறியுள்ளது. விஜய்யின் கடந்த பரப்புரையின் போதே அனுமதி கோரிய அளவை விட அதிக எண்ணிக்கையில் தான் மக்கள் கூடினர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இன்றைய கரூர் பரப்புரைக்கும், 10,000 பேர் கூடுவார்கள் என தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.