News September 27, 2025

அட்டர்னி ஜெனரலின் பதவி காலம் நீட்டிப்பு

image

இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியின் பதவி காலத்தை 2 ஆண்டுகள் நீட்டித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். வரும் 30-ம் தேதியோடு அவரது பதவி காலம் முடிவடைய இருந்தது. நாட்டின் எந்த கோர்ட்டிலும் ஆஜராகும் உரிமை அட்டர்னி ஜெனரலுக்கு உண்டு. அரசாங்க வழக்குகளை கையாள்வதோடு, சிக்கலான சட்டப் பிரச்னைகள் குறித்தும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவார். வெங்கட்ரமணி புதுச்சேரியில் பிறந்தவர் ஆவார்.

Similar News

News January 12, 2026

நாடு முழுவதும் ஒரு லட்சம் மாநாடுகளை நடத்தும் RSS!

image

RSS நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக, வரும் 15-ம் தேதி முதல் இந்து சம்மேளனங்களை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாதி, வர்க்க வேறுபாடுகளை களைந்து இந்துக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு லட்சம் மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. ஆன்மிகவாதிகள், முக்கியஸ்தர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்று, சமபந்தி உணவுடன் முடியும்.

News January 12, 2026

விஜய்க்கு பல கதைகள் சொன்ன ‘பகவந்த் கேசரி’ இயக்குநர்!

image

விஜய்யின் கடைசி படத்தை இயக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார். ஆனால், ரீமேக் வேண்டாம், நேரடி தமிழ் படம் இயக்குகிறேன் என பல கதைகளை கூறியதாகவும், ஆனால் ‘பகவந்த் கேசரி’ விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், விஜயின் கடைசி படம் எப்போதும் ரிலீஸானாலும் சாதனை படைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News January 12, 2026

புல்லட் ரயில் தாமதத்திற்கு ₹88,000 கோடி விலை!

image

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் (மும்பை – அகமதாபாத்) 2029 டிசம்பரில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக சூரத் – பிலிமோரா இடையே 2027 ஆக.15-ம் தேதி இயக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு முதலில் ₹1.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கொரோனா, நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட காரணங்களால் 4 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டதால், அதன் செலவுகள் தற்போது ₹1.98 லட்சமாக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!