News September 27, 2025

ஈபிள் டவர் விற்பனைக்கா? இது பெரிய உருட்டா இருக்கே

image

1925ம் ஆண்டு விக்டர் லுஸ்டிக் என்பவர் வரலாற்றில் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றைச் செய்துள்ளார். ஈபிள் டவரை ஒருமுறை அல்ல இரண்டுமுறை விற்பனை செய்துள்ளார். தன்னை ஒரு பிரெஞ்சு அரசாங்க அதிகாரியாக காட்டிக்கொண்டு, பராமரிப்பு செலவு காரணமாக அரசாங்கம் ஈபிள் டவரை விற்பதாக, செல்வந்தர்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இவர் பேராசையை பயன்படுத்தி துணிச்சலுடன் புத்திசாலித்தமான பல மோசடிகள் செய்துள்ளார்.

Similar News

News January 12, 2026

ஈரானில் இந்தியர்கள் கைதா?

image

<<18832349>>ஈரானில்<<>> அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருவதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், அங்கு கலவரத்தில் ஈடுபட்டதாக 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானது. இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபதலி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் நிலைமை குறித்த உடனடி தகவல்களுக்கு நம்பகமான செய்தி நிறுவனங்களை அணுகவும் அறிவுறுத்தியுள்ளார்.

News January 12, 2026

AI-ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா?

image

மனிதர்களின் கைகளை மீறி போகும் முன் AI-ஐ கட்டுப்படுத்த வேண்டும் என AI நிறுவனங்களை மைக்ரோசாஃப்ட் AI CEO முஸ்தபா சுலைமான் அறிவுறுத்தியுள்ளார். உங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை நீங்கள் வழிநடத்த முடியாது. அதனால் தான் மனிதர்களின் மேற்பார்வையில் ‘Super Intelligence’ நோக்கிய பயணம் அமைய வேண்டும் என்கிறோம். எனவே, மனிதர்களுக்கு தீங்கிழைக்காத வகையில் AI-ஐ மேம்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News January 12, 2026

இந்தியாவிற்குள் நுழைய 1,000 பயங்கரவாதிகள் தயார்!

image

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான JeM-ன் தலைவர் மசூத் ஆசார் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஆயிரக்கணக்கான தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்குமாறு தன்னை வலியுறுத்தி வருவதாகவும் மசூத் ஆசார் பேசுகிறார். மேலும், தங்கள் நெட்வொர்க்கின் ஆள்பலத்தை கூறினால் உலகமே நடுங்கும் என்றும் கூறுகிறார்.

error: Content is protected !!