News April 13, 2024
புத்தாண்டிலிருந்து பணம் கொட்டப் போகும் ராசிகள்

சித்திரை மாதம் முதல் நாள் (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. குரோதி ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டு 12 ராசிகளுக்கும் நற்பலன்களை அளித்தாலும் ரிஷபம், மிதுனம், துலாம், மீன ராசியினருக்கு ஓஹோவென்று அமையப் போகிறது. தொழிலில் லாபம், முதலீடுகளில் இரட்டிப்பு வருமானம், செய்யும் செயலில் வெற்றி, உறவினர்களின் ஆதரவு என மேற்கண்ட ராசியினருக்கு இந்த ஆண்டு முழுவதுமே பணம் கொட்டப் போகிறது.
Similar News
News April 28, 2025
பொன்முடி அவுட்…விழுப்புரம் திமுக பரபர

சர்ச்சை பேச்சுக்காக கட்சிப் பதவியை இழந்த பொன்முடி, தற்போது அமைச்சரவையில் இருந்தும் விலகியிருப்பது, அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து அவர் பதவிகளை இழந்திருப்பது, விழுப்புரம் மாவட்ட திமுகவில் அவருடைய எதிர்த்தரப்பான செஞ்சி மஸ்தான், லட்சுமணன் கோஷ்டியினரின் கையை ஓங்கச் செய்துள்ளது. மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டதில் இருந்தே பொன்முடி அதிருப்தியில் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.
News April 28, 2025
சம்மரில் சர்க்கரை நோயாளிகள் இதை குடிக்கலாம்!

சம்மரில் வெப்பத்தை குறைக்கவும், ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்கவும் சர்க்கரை நோயாளிகள் கீழ்காணும் பானங்களை பருகலாம். மசாலா மோர் செரிமானத்தை ஊக்குவிக்கவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. பொட்டாசியம், எலக்ட்ரோலைட்களின் சிறந்த மூலமான தேங்காய் நீரை பருகலாம். நெல்லிக்காய் சாரில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. வெள்ளரிக்காய் – புதினா டிடாக்ஸ் நீரையும் பருகலாம்.
News April 28, 2025
மோசமான ஃபார்ம் குறித்து பண்ட் விளக்கம்

நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமான ஃபார்ம் குறித்த கேள்விக்கு, இது பற்றி அதிகமாக யோசிக்கவில்லை என LSG கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு சீசனில், நமக்கு சாதகமாக நடக்காதபோது, ஒரு வீரராக நம் மீது கேள்வி எழுவது உண்மைதான், ஆனால் அதை பற்றி மட்டும் தீவிரமாக யோசிக்க கூடாது எனவும், இது ஒரு டீம் விளையாட்டு என்பதால், தனி வீரர்களை மட்டுமே எப்போதும் நம்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.