News September 27, 2025

தருமபுரி: குரூப் 2 தேர்வு 20,109 பேர் எழுதவுள்ளனர்.

image

தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில், 20,109 பேர் எழுதவுள்ளதாக, மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில், 65 தேர்வு மையங்களில், 20,109 தேர்வர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்வெழுதவுள்ளனர். தேர்வினை கண்காணிக்க, 4 பறக்கும்படை அலுவலர்கள், 14 நடமாடும் குழுக்கள் மற்றும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலர் வீதம், 65 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News January 12, 2026

தருமபுரி: ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை – உடனே முந்துங்கள்!

image

தருமபுரி மக்களே, இந்திய ரயில்வே துறையில் 8 பிரிவுகளின் கீழ் 312 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.29-க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 12, 2026

தருமபுரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கொட்ட அரங்கில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர் தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நாளை (ஜன.13) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் படைவீரர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளையும் கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று அறிவித்துள்ளார்.

News January 12, 2026

தருமபுரி: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

image

தருமபுரி மக்களே! இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!