News September 27, 2025

புயல் சின்னம்: கனமழை வெளுத்து வாங்கும்

image

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. அதேபோல், சென்னையில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Similar News

News January 13, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு புதிய அறிவிப்பு

image

தமிழகத்தில் ஒரு சிலருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சிரமம் இருந்தது. குறிப்பாக, ரேஷன் கடைகளில் முதியவர்களின் விரல் ரேகை பதிவு செய்யும் போது, ஒப்புதல் பெற தாமதம் ஏற்படுவதால், அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, விரல் ரேகை சரிபார்ப்பில் பாதிப்பு ஏற்பட்டால், கண் கருவிழி ரேகை கருவியை பயன்படுத்தி, பொங்கல் தொகுப்பு வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

News January 13, 2026

16 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, திருவாரூர், திருச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

News January 13, 2026

விஜய் ரசிகர்களை எச்சரித்த ‘பராசக்தி’ தயாரிப்பாளர்

image

‘பராசக்தி’ படம் குறித்து விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தேவ் ராம்நாத் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த ஆண்டில் ரிலீசான ஒரு படத்திற்கும் இதேபோன்று அவர்கள் செய்தனர். உங்கள் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் நாங்களா தடுத்தோம்? நாங்கள் தான் ரிலீஸ் தேதி முதலில் அறிவித்தோம். விஜய் ரசிகர்களின் செயல் யாருக்கும் நல்லதல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!