News September 27, 2025
குரூப் 4: 727 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு

ஜூலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில், தற்போது கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 4,662ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 11.38 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 12, 2026
ரயில்வேயில் வேலை.. ₹45,000 வரை சம்பளம்

இந்திய ரயில்வேயில் வழக்கறிஞர், மொழிபெயர்ப்பாளர், அறிவியல் உதவியாளர், ஆய்வக உதவியாளர், சூப்பர்வைசர் உள்ளிட்ட பதவிகளில் 312 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளம்: ₹19,900 – ₹44,900 வரை. வயது வரம்பு: 18- 40 வரை இருக்கலாம். தேர்வு முறை: கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்க இங்கே <
News January 12, 2026
சென்சார் போர்டின் Brand Ambassador நான் தான்: ஜீவா

‘ஜன நாயகன்’ படம் சென்சார் பிரச்னையால் தள்ளிப்போனதால், ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ஜன.15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், புரோமோஷன் விழாவில் சென்சார் போர்டு தொடர்பாக ஜீவாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தான் நடித்த ஜிப்ஸி திரைப்படத்திற்கு 48 கட் கொடுத்ததாகவும், சென்சார் போர்டின் Brand Ambassador நான் தான் என கலகலப்பாக பதிலளித்தார்.
News January 12, 2026
அண்ணாமலை போட்டியிடப் போகும் தொகுதி இதுவா?

2024 தேர்தலில் கோவையில் போட்டியிட்டு தோற்றார் அண்ணாமலை. இருப்பினும், மற்ற மாவட்டங்களை விட கோவையில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதால் அப்பகுதியிலேயே வரும் தேர்தலில் அவரை களமிறக்க டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதன்படி, கோவை சிங்காநல்லூர் (அ) வடக்கு தொகுதியில் அண்ணாமலையை களமிறக்க ஆலோசனை நடப்பதாக பேசப்படுகிறது. இதை தவிர காங்கேயத்திலும் களமிறங்க வாய்ப்பு என கூறப்படுகிறது.


