News September 27, 2025
குரூப் 4: 727 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு

ஜூலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில், தற்போது கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 4,662ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 11.38 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 27, 2025
Sports Roundup: வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

*தென் கொரியாவில் நடைபெறும் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப், மகளிர் இரட்டையரில் இந்தியாவின் ஷீதல் தேவி – சரிதா இணை வெள்ளி வென்றது. *கலப்பு இரட்டையரில் ஷீதல் தேவி – தோமன் குமார் இணை வெண்கலம் வென்றது. *Koahsiung மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவின் இஷாராணி தோல்வி. *உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ஜூனியர், 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ராஷ்மிகா – கபில் இணை தங்கம் வென்றது.
News September 27, 2025
ஒட்டுமொத்த சனியின் உருவமே சீமான் தான்: ஜெயக்குமார்

மறைந்த தலைவர்களை பற்றி கொச்சையாக பேசினால் சீமானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சனியில் எத்தனையோ விதம் இருந்தாலும், ஒட்டுமொத்த சனியின் ஒற்றை உருவமாக சீமான் உள்ளார் என்றும் மறைந்த தலைவர்களை பற்றி பேசி அதிமுகவிடம் சீமான் வாங்கிக்கட்டி கொள்ள வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், சீமானுக்கு மறை கழன்றுவிட்டதாகவும் சைகை காண்பித்து அவர் விமர்சித்தார்.
News September 27, 2025
தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்க?

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர் ➼முதுகை வளைத்து, தட்டில் இருந்து உணவை எடுத்து சாப்பிடுவதால், செரிமானம் சீராகிறது ➼தரையில் அமரும்போது, வேகஸ் எனும் நரம்பு சுறுசுறுப்பாக செயல்படுவதால், வயிறு நிறைந்தவுடன் உடனடியாக தகவல் மூளைக்கு போகிறது. இதனால், உடல் எடை கட்டுக்குள் இருக்கும் ➼குடும்பத்துடன் தரையில் அமர்ந்து சாப்பிடும் போது, மன நிம்மதி ஏற்படும். SHARE.