News September 27, 2025
தூத்துக்குடியில் நாளை TNPSC தேர்வு! சிறப்பு பேருந்துகள் தயார்

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் நாளை (செப். 28) நடைபெற உள்ளது. தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் உள்ள 49 மையங்களில் மொத்தம் 14,305 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்தலை ஒட்டி அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 15, 2026
தூத்துக்குடி : வங்கியில் ACCOUNT இருக்கா?- இத தெரிஞ்சுக்கோங்க

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
News February 15, 2026
தூத்துக்குடி: டாஸ்மாக்-ல் அரிவாள் கொண்டு மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டாஸ்மாக் ஒயின்ஷாப்பில் முருகன் (47) என்பவர் பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த கடையில் புகுந்த தண்டபாணி, தங்கதுரை, மலையாண்டி ஆகிய 3 பேரும் அரிவாளுடன் சென்று தங்களுக்கு பீர் பாட்டில் வேண்டும் என கேட்டு மிரட்டி அதனை எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
News February 15, 2026
தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தூத்துக்குடி மக்களே; இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


