News September 27, 2025
திருச்சி: சூரிய மின் திட்டம் தொடர்பான முகாம் அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், பிரதம மந்திரியின் சூரிய மின் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் வரும் 29ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சூரிய மின் தகடுகள் அமைக்க கடன் வழங்குவது தொடர்பாக வங்கி முகவர்கள் பங்கேற்கின்றனர். இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொள்ள வேண்டுமென மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 15, 2026
திருச்சி: தோஷங்கள் தீர்க்கும் கோயில்!

திருச்சி, லால்குடி அடுத்த மாந்துறையில் ஆம்ரவனேசுவரர் கோயில் உள்ளது. சிவபெருமானின் முடி கண்டதாக பொய்யுரைத்த பிரமன் இத்தலத்தில் தவமியற்றி தனது பாவத்தை போக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் வழிபட்டால் திருமண தடை, தோஷங்கள், சாபங்கள் மற்றும் நாம் செய்த தவறுகளுக்கு மனம் திருந்தி மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News January 15, 2026
திருச்சி: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

திருச்சி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News January 15, 2026
நவல்பட்டு: துணை முதல்வரை வரவேற்ற ஆட்சியர்

திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் பூங்கொத்து வழங்கி வரவேற்பளித்தார். இந்நிகழ்வில் அரசு துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


