News September 27, 2025
திருச்சி: சூரிய மின் திட்டம் தொடர்பான முகாம் அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், பிரதம மந்திரியின் சூரிய மின் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் வரும் 29ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சூரிய மின் தகடுகள் அமைக்க கடன் வழங்குவது தொடர்பாக வங்கி முகவர்கள் பங்கேற்கின்றனர். இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொள்ள வேண்டுமென மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 14, 2026
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
திருச்சி: எஸ்.பி தலைமையில் குற்றத்தடுப்பு கூட்டம்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் தலைமையில் நேற்று (ஜன.13) மாதாந்தர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் பங்கேற்று குற்ற வழக்கின் நிலுவை தன்மைகள் மற்றும் நிலைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் எஸ்.பி காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.
News January 14, 2026
திருச்சி: எஸ்.பி தலைமையில் குற்றத்தடுப்பு கூட்டம்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் தலைமையில் நேற்று (ஜன.13) மாதாந்தர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் பங்கேற்று குற்ற வழக்கின் நிலுவை தன்மைகள் மற்றும் நிலைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் எஸ்.பி காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.


