News September 27, 2025

BREAKING: தமிழகம் முழுவதும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Similar News

News September 27, 2025

பழைய சோறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

image

*உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் பழைய சோற்றில் இருக்கின்றன. *இதை சாப்பிட்டால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும். *உடல் உஷ்ணம் குறையும். * இது அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கலை நீக்கும். *உடல் சோர்வை குறைக்கும். *தோல் தொடர்பான வியாதிகளுக்கும் தீர்வு தரும். *இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். *பழைய சோறு என்றாலும் நீருற்றிய 15 மணி நேரத்திற்குள் சாப்பிடுங்கள்.

News September 27, 2025

GALLERY: கட்சி தொடங்கி சறுக்கிய ஹீரோஸ்!

image

கட்சி ஆரம்பித்த தமிழ் நடிகர்களை 2 பிரிவாக பிரிக்கலாம். ஜெயித்தவர்கள்/ ஓரளவு வென்றவர்கள் மற்றும் ஜொலிக்காதவர்கள்/ சறுக்கியவர்கள். முதல் பட்டியலில் இடம்பெறும் MGR ஆட்சியில் அமர்ந்தார், விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவரானார். எதிர்பார்த்த வெற்றியை எட்டாத, 2-வது பட்டியலில் உள்ளவர்களை போட்டோக்களில் கொடுத்துள்ளோம். வலது பக்கம் Swipe செய்து பாருங்கள். விஜய் எந்த லிஸ்ட்டில் இணைவார் என நினைக்கிறீங்க?

News September 27, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை விமர்சித்த EPS

image

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை EPS கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களின் பிரச்னைகளை கண்டுபிடிப்பதற்கே CM ஸ்டாலினுக்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள் அனைத்து பிரச்னைகளையும் எப்படி அவர் தீர்ப்பார் என்றும் EPS கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முகாமில் மக்கள் அளிக்கும் மனுக்களை அதிகாரிகள் ஆற்றில் வீசி அலட்சியம் செய்வதாகவும் EPS சாடினார்.

error: Content is protected !!