News September 27, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
Similar News
News January 12, 2026
தருமபுரி: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

தருமபுரி மக்களே! இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 12, 2026
BREAKING: டெல்லியில் CBI வலை.. விஜய் அதிர்ச்சி

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் 2 மணிநேரத்திற்கும் மேலாக CBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேர் கொண்ட குழுவினர் 56 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அளித்திருந்த பதில்களுடன் விஜய் அளிக்கும் பதிலில் ஏதேனும் முரண்பாடாக இருந்தால் அது, விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
News January 12, 2026
திமுக – காங்., கூட்டணியில் மீண்டும் சண்டை வெடித்தது

TN-ல் கூட்டணி ஆட்சி இருக்காது, அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் எண்ணம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை என அமைச்சர் <<18826821>>ஐ.பெரியசாமி <<>>கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள செல்வப்பெருந்தகை, ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது, ஐ.பெரியசாமி கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என பேசியுள்ளார். மேலும், இதுகுறித்து ராகுல் காந்தியும், ஸ்டாலினும் தான் பேசி முடிவு செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


