News September 27, 2025
இன்று முதல் விடுமுறை..

காலாண்டு தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது. அனைத்து பள்ளிகளும் அக்.5 வரை 9 நாள்கள் மாணவர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். காலாண்டு விடுமுறை நாள்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News September 27, 2025
தமிழகத்தில் கல்வித்துறை சீரழிந்து விட்டது: அன்புமணி

தமிழகத்தில் கல்வித்துறை சீரழிந்து விட்டதாக அன்புமணி விமர்சித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி திமுக கல்விக்கான நிதியை 3 மடங்கு உயர்த்தவில்லை என்றும், 100 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை எனவும் சாடியுள்ளார். அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் போட்டி போடும் காலம் மாறி, தற்போது 40 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 27, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹6000 உயர்வு

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹6 உயர்ந்து ₹159-க்கும், கிலோ வெள்ளி ₹6000 உயர்ந்து ₹159,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ₹6 ஆயிரம் உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 2 நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹9 ஆயிரம் அதிகரித்துள்ளது.
News September 27, 2025
மாசம் ₹210 முதலீட்டில் ₹5,000 பென்ஷன் தரும் திட்டம்!

மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் மாதம் ₹42-யை முதலீடு செய்தால், 60 வயதுக்கு பின் மாதம் ₹1,000 கிடைக்கும். மாதம் ₹210 முதலீடு செய்தால், மாதம் ₹5,000 கிடைக்கும். 18- 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். குறைந்தது 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம். இதனை நண்பர்களுக்கு பகிருங்கள்.


