News April 13, 2024
மதுரை: பிளஸ் 2 மாணவன் தற்கொலை

மதுரை அருகே நிலையூரை சேர்ந்தவர் செந்தில் மகன் ராகுல்(18). இவர் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இவரது தந்தை இறந்து விட்டதால், தாய் ராகுலை வேலைக்கு செல்லும்படி கூறியுள்ளார். இதனால் மனம் வெறுத்த ராகுல் அப்பகுதியில் உள்ள சூரக்குளம் கண்மாய் பகுதியில் விஷம் குடித்து இன்று தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 19, 2025
மதுரை மக்களே இன்றைக்கு மிஸ் பண்ணிடாதீங்க

மதுரை வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று 19.09.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். வேலைதேடும் இளைஞர்கள் <
News September 18, 2025
BREAKING: மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அறிவிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கில் கோயில் இணை ஆணையர் பதிலளிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவு மற்றும் கோயில் குடமுழுக்கிற்கு முன்பாக புதுமண்டபம் புதுப்பிக்கும் பணி முடிந்துவிடுமா என மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு டிச.மாதம் அமைச்சர் குடமுழுக்கு குறித்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
News September 18, 2025
மதுரை: 10th தகுதி.. ரூ.71,000 சம்பளத்தில் வேலை

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.<