News September 27, 2025
ஆஸ்துமா பிரச்னைக்கு இந்த மூலிகை தேநீரை குடிங்க!

சளி, இருமல், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் கல்யாண முருங்கை இலை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ➥கல்யாண முருங்கை இலைகளை கழுவி, சிறு சிறு பொடியாக நறுக்கவும் ➥தண்ணீரில் இவை, 3- 5 நிமிடங்கள் வரை நன்கு கொதித்த பிறகு, வடிகட்டி கொள்ளவும் ➥சுவைக்காக சிறிதளவு வெல்லம் சேர்த்தால், சுவையான கல்யாண முருங்கை தேநீர் ரெடி. SHARE IT.
Similar News
News January 5, 2026
BREAKING: திமுக அமைச்சருக்கு அதிர்ச்சி

ED நோட்டீஸை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி (IP) தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2006-11 வரை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக ₹2 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக IP மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டும், சொத்து முடக்கம் தொடர்பாகவும் ED நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட், ED-ஐ அணுக உத்தரவிட்டுள்ளது.
News January 5, 2026
BCCI-யிடம் கேப்டன் கில் வைத்த கோரிக்கை!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், BCCI-யிடம் வைத்த கண்டிஷன் பேசும் பொருளாகியுள்ளது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக, அணியின் வீரர்களுக்கு 15 நாள் பயிற்சி கேம்ப் நடந்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளாராம். தொடருக்கு முன்பாக, வீரர்களின் Focus & உடலை வலுவாக்கும் இது உதவும் என குறிப்பிடப்படுகிறது. தொடர் தோல்விகளால் துவண்டுள்ள இந்திய அணியை இது மேம்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.
News January 5, 2026
இது இனி உங்க தலையிலும் ஒட்டியிருக்கலாம்!

Zomato CEO தீபிந்தர், தலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த கருவியின் பெயர் ‘Temple’. டெஸ்டிங் ஸ்டேஜில் உள்ள இது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகவும், ஒரே வேகத்திலும் உள்ளதா என்பதை கண்காணிக்கிறதாம். மேலும், இதன் மூலம் நரம்பியல் ஆரோக்கியம், மூளையின் செயல்திறனை கவனிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. மக்களின் பயன்பாட்டிற்கு வந்தால், இது வருங்காலத்தில் அனைவரின் தலையில் ஒட்டிக் கொண்டிருக்கலாம்.


