News September 27, 2025
ஓசூரை உலுக்கிய சூதாட்ட வழக்கு.. போலீசார் அறிவுறுத்தல்!

ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் நேற்று நள்ளிரவில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது ரூ 8,58,000 பணத்துடன் அவர்கள் சிக்கினர். இந்த சோதனையில் 10க்கும் மேற்பட்ட டிஎஸ்பிகள் இணைந்து குறிவைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் இதுபோன்ற சூதாட்டம் நடந்தால் பொதுமக்கள் பயப்படாமல் காவல்துறையிடம் தகவல் அளிக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகள் நேற்று (செப்-26) அறிவுறுத்தினர்.
Similar News
News January 13, 2026
கிருஷ்ணகிரி: பொங்கல் பரிசு வரலையா..?

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே! பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)
News January 13, 2026
கிருஷ்ணகிரி: விபத்தில் மூதாட்டி பலி!

பந்தாரப்பள்ளி, ஓசூர்-கிருஷ்ணகிரி NH-ல் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கிராம நிர்வாகி அளித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த மூதாட்டி யார்? என விசாரித்து வருகின்றனர்.
News January 13, 2026
கிருஷ்ணகிரி: துக்க வீட்டுக்கு சென்ற பெண் பலி!

பெரிய ஜோகிப்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் (52) நேற்று முன்தினம் (ஜன.12) தனது சித்தியான முருகம்மாளுடன் (54) துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு சாமல்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி – தி.மலை NH-இல் பின்னால் வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த முருகம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து மத்தூர் போலீசார் விக்னேஷ் (27) எனபவரை கைது செய்தனர்.


