News September 27, 2025
திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நில தகராறில் பழனிச்சாமி என்பவரை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த உதட்டன், அழகேசன், ராஜாமணி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 6 மாத தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
Similar News
News January 20, 2026
திருச்சி: வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜன.24-ம் தேதி, வயலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த வாய்ப்பை வேலை நாடுநர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
திருச்சி: அரசு சுகாதார துறையில் வேலை! அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது – 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 20, 2026
கழிவுகளை ஆற்றில் கலந்துவிட்ட மாநகராட்சி ஊழியர்கள்

திருவெறும்பூர் அருகே திருநகரில் உய்யக்கொண்டான் ஆறு செல்கிறது. அங்கு பாதாள சாக்கடை கழிவுகளை நேரடியாக திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் கலந்துவிடும் கொடுமை நேற்று அரங்கேறியது. ஏரி, குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டிய அரசு ஊழியர்களே இதுபோன்று செயலை செய்தது, பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


