News September 27, 2025
விழுப்புரம் மக்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விதிமுறைகளை மீறி, மின் வேலி அமைப்பது கிரிமினல் குற்றம் என மின்சாரத் துறை எச்சரித்துள்ளது. மேலும், பச்சை மரங்கள் மற்றும் இரும்பு கிரில்களில் அலங்கார சீரியல் விளக்குகளைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கனரக வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கக் கூடாது. மின் குறைகளுக்கு 94987 94987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது. DSP R.பிரகாஷ் தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி பகுதிகளுக்கான காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர தேவைகளில் நேரடியாக தொடர்புகொள்ளலாம். உதவி எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
News January 14, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது. DSP R.பிரகாஷ் தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி பகுதிகளுக்கான காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர தேவைகளில் நேரடியாக தொடர்புகொள்ளலாம். உதவி எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
News January 14, 2026
சமத்துவ பொங்கல் விழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டி

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இந்த பொங்கல் விழாவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஜெ.இ.பத்மஜா, ஆகியோர் பரிசுகளை இன்று (ஜன.13) வழங்கினார்.


