News September 27, 2025

விஜய் பேச்சுக்கு வைகோ வரவேற்பு

image

1.37லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என வைகோ தெரிவித்துள்ளார். அந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் ஐநா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இலங்கை தமிழர்களுக்காக விஜய் உட்பட யார் குரல் கொடுத்தாலும், அதை மனதார வரவேற்பதாக சென்னையில் அளித்த பேட்டியில் வைகோ கூறியுள்ளார்.

Similar News

News September 27, 2025

முதுகு தசைப்பிடிப்பு குணமாக இந்த யோகா பண்ணுங்க!

image

✱அர்த்த பிஞ்சா மயூராசனம் செய்வதால் தோள்பட்டை, முழங்கை எலும்புகள், முதுகுத்தண்டு பலப்படும் ✱இதை செய்ய முதலில், முட்டி போட்டு தரையில் அமரவும் ✱கைகளை தரையில் ஊன்றி(படத்தில் உள்ளது போல), மெதுவாக முன்னோக்கி குனியவும் ✱முழங்கால் இட்ட நிலையில் இருந்து எழுந்து, இரு கால்களை தரையில் பதித்து, இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும் ✱இந்த நிலையில் 15- 20 வினாடிகள் வரை இருக்கலாம். SHARE IT.

News September 27, 2025

சீமானுக்கு அடிப்படை நாகரிகம் தெரியவில்லை: அதிமுக

image

அண்ணா, எம்.ஜி.ஆரை பற்றி இழிவாகப் பேச சீமானுக்கு தகுதியில்லை என அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. இரண்டு சனியன்களை சேர்த்து விஜய் சட்டை தைத்துவிட்டதாக அவர் பேசிய நிலையில், மறைந்த தலைவர்களை எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட சீமானுக்கு இல்லை என அதிமுக சாடியுள்ளது. திரள்நிதி வசூல் செய்து உடம்பை வளர்க்கும் சீமானுக்கு எம்.ஜி.ஆரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அதிமுக விமர்சித்துள்ளது.

News September 27, 2025

நவராத்திரி 6-ம் நாள் சொல்ல வேண்டிய மந்திரம்!

image

நவராத்திரி 6 ஆம் நாளில் அம்பாள், சண்டிகா தேவி என்னும் ரூபத்துடன் காட்சி அளிக்கிறாள். இன்றைய தினம் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
ஹே கௌரி ஷங்கர் அர்தங்கி யதா த்வம் ஷங்கர் பிரியா ததா மாம் குரு கல்யாணி கான்டகம் சுதுர்லபம்
பொருள்:
சிவனின் பாதி உடல் கொண்ட பார்வதி தேவியே, நீ சிவனின் பிரியமானவள் போல, எனக்கு விரும்பத்தகுந்த கணவனை அருள வேண்டும். SHARE.

error: Content is protected !!