News September 26, 2025
தொடர் விடுமுறை: 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கம்

காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை நாள்களை முன்னிட்டு சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து இன்று முதல் செப்.30 வரை 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. அதேபோல், அக்.4, 5-ல் சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்புவதற்கு ஏதுவாகவும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் 3 நாள்களுக்கு 93,138 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News September 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 471
▶குறள்:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
▶பொருள்: செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.
News September 27, 2025
விஜய் பேச்சுக்கு வைகோ வரவேற்பு

1.37லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என வைகோ தெரிவித்துள்ளார். அந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் ஐநா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இலங்கை தமிழர்களுக்காக விஜய் உட்பட யார் குரல் கொடுத்தாலும், அதை மனதார வரவேற்பதாக சென்னையில் அளித்த பேட்டியில் வைகோ கூறியுள்ளார்.
News September 27, 2025
புதுச்சேரியில் தீபாவளிக்கு பரிசுத் தொகுப்பு

தீபாவளிக்கு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 5 பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தீபாவளி தொகுப்பில், 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ சூர்ய காந்தி எண்ணெய், ஒரு கிலோ கடலைப் பருப்பு, அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா என 5 பொருட்கள் கொடுக்கப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள 3.45 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கும் இந்தத் தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது.