News September 26, 2025
கரூர்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வதியம் குடித்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் 90. அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் புகையிலை விற்ற நடராஜன் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 10, 2026
கரூர் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News January 10, 2026
கரூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

கரூர் மாவட்டம், கடவூர் அருகே சுருமன்பட்டி சாலையில், ரமணா என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இது குறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவு மூலமாக குற்றவாளியை தேடி வருகின்றனர்.
News January 9, 2026
கரூர்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

கரூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி நாளை ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


