News September 26, 2025
திருவண்ணாமலை: விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் தலைமையில் இன்று (26.09.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செப்டம்பர் மாத மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் விவசாயிகள் நேரடியாக தங்கள் பிரச்சினைகள், பரிந்துரைகள், திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
Similar News
News January 19, 2026
தி.மலை பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000!

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) <
News January 19, 2026
தி.மலை: பட்டப்களில் செயின் பறிப்பு

கண்ணமங்கலம் அருகில் உள்ள முருகாபாடி கிராமத்தில் வசிப்பவர் கனகா(65). இவர் மதிய நேரத்தில் தனது நிலத்தில் கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 25 வயது உடைய மர்ம நபர் கனகாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை திடீரெனப் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். அதிர்ச்சியில் கனகா திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிடும் பயனில்லை. புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
News January 19, 2026
தி.மலை: குண்டு வீச்சில் முடித்த பொங்கல் விளையாட்டு!

செய்யாறு தாலுகா பெரும்பாலை கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது தென்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (28) அங்கு வந்துள்ளார். அவர் அங்கிருந்த இருந்தவர்களிடம் வீண் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் கூட்டத்தின் நடுவே பெட்ரோல் குண்டு வீசியதால் 7 பேர் தீ காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் பாலாஜியை தேடி வருகின்றனர்.


