News September 26, 2025

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக, பாமக, பாஜகவை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் CM ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். சித்தாமூர், சாலவாக்கம் ஒன்றியங்களை சேர்ந்த பாஜகவின் பி.அமீர்பாஷா, எஸ்.பாஸ்கர், ஏ.சண்முகம், அதிமுகவை சேர்ந்த எம்.அன்பழகன், ஜி.சசிகுமார், மணிகண்டன், பாமகவில் இருந்து ஏ.நரேஷ், வி.நாராயணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.

Similar News

News September 27, 2025

சீமான் வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்

image

2018-ம் சென்னை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சீமான் தரப்பில் சென்னை HC-ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டதாக வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கோர்ட் வழக்கை ரத்து செய்தது.

News September 27, 2025

சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி

image

சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளையும் இலங்கை இழந்ததால் இந்தியாவுக்கு 3 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து சூர்யகுமாரும் சுப்மன் கில்லும் சூப்பர் ஓவரில் களமிறங்கினர். இதில் முதல் பந்திலேயே இந்தியாவின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். 2025 ஆசிய கோப்பை தொடரிலேயே சிறந்த ஆட்டம் இதுதான் என்று சொல்லும் வகையில் த்ரில்லிங்காக நடந்து முடிந்தது.

News September 27, 2025

சூப்பர் ஓவரில் இந்தியாவுக்கு 3 ரன்கள் டார்கெட்

image

இந்தியா – இலங்கை இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை முதல் பந்திலேயே நிசங்காவின் விக்கெட்டை பறிகொடுத்தது. 5-வது பந்தில் 2 வது விக்கெட்டையும் இலங்கை இழந்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவை. சூப்பர் ஓவரில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார்.

error: Content is protected !!