News September 26, 2025
தரமற்ற உணவு பொருள்: 251 கடைகள் மீது நடவடிக்கை

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக நான்கு மாதத்தில் 251 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 80 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற உணவுப் பொருட்களை விற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News January 26, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஜன.26) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News January 26, 2026
நெல்லை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

நெல்லை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க
News January 26, 2026
நாங்குநேரியில் நாளை மின்தடை அறிவிப்பு

நாங்குநேரி AMRL துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாங்குநேரி, இராஜாக்கள் மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.


