News September 26, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. அரசின் புதிய அப்டேட்

மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருப்போருக்கு DCM உதயநிதி புதிய அப்டேட் கொடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இன்னும் 2 மாதங்களில் தகுதிவாய்ந்தோருக்கு உரிமைத்தொகை ₹1,000-ஐ CM ஸ்டாலின் நிச்சயம் கொடுப்பார் என்றார். முன்னதாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அரசு கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News September 27, 2025
சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி

சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளையும் இலங்கை இழந்ததால் இந்தியாவுக்கு 3 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து சூர்யகுமாரும் சுப்மன் கில்லும் சூப்பர் ஓவரில் களமிறங்கினர். இதில் முதல் பந்திலேயே இந்தியாவின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். 2025 ஆசிய கோப்பை தொடரிலேயே சிறந்த ஆட்டம் இதுதான் என்று சொல்லும் வகையில் த்ரில்லிங்காக நடந்து முடிந்தது.
News September 27, 2025
சூப்பர் ஓவரில் இந்தியாவுக்கு 3 ரன்கள் டார்கெட்

இந்தியா – இலங்கை இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை முதல் பந்திலேயே நிசங்காவின் விக்கெட்டை பறிகொடுத்தது. 5-வது பந்தில் 2 வது விக்கெட்டையும் இலங்கை இழந்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவை. சூப்பர் ஓவரில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார்.
News September 27, 2025
சூப்பர் ஓவருக்கு சென்ற இந்தியா – இலங்கை போட்டி

ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முதலி ஆடிய இந்தியா 202 ரன்களை குவித்தது. வழக்கம் போல் அபிஷேக் சர்மா அதிரடியாக தொடக்க கொடுக்க, இறுதியில் திலக், சஞ்சு இலங்கை பந்து வீச்சை பதம் பார்த்தனர். தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து சதம் அடித்தார். அவர் ஆட்டம் இழந்த பின் இந்தியா பக்கம் மேட்ச் வந்தாலும் இறுதியில் டிராவில் முடிவடைந்தது.