News September 26, 2025
TNPSC குரூப்-2 தேர்வு: ஒரு இடத்திற்கு 858 போட்டி

நாளை மறுதினம் நடைபெறவுள்ள குரூப்-2, 2A தேர்வுக்கான புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. 1,905 மையங்களில் 5,53,634 பேர் தேர்வு எழுத உள்ளனர். காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டும், ஹால்டிக்கெட் தவிர எவ்விதமான மின்னணு சாதனங்களுக்கும் அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. 645 பணியிடங்களுக்கு 5,53,634 பேர் தேர்வு எழுத உள்ளதால் ஒரு இடத்திற்கு 858 பேர் போட்டிப்போடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 26, 2026
திருமாவளவன் முக்கிய ஆலோசனை!

விசிக மண்டலப் பொறுப்பாளர்கள் கூட்டம் திருமாவளவன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில், தேர்தல் பணிகள், கூட்டணி, தொகுதிகள் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. குறிப்பாக பாமக(ராமதாஸ்) திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தங்களது நிர்வாகிகளின் கருத்துகளை திருமாவளவன் தனித் தனியாக சந்தித்தும் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 26, 2026
பன்முகத்தன்மையே நமது பலம்: CM ஸ்டாலின்

77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில், நமது பலம் என்பது ஒற்றைத்தன்மை அல்ல பன்முகத்தன்மையே என்றும், அந்த பன்முகத்தன்மை காக்கப்படுவதே இந்தியாவை காக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், சுயமரியாதை உணர்வுடன், நம்பிக்கையுடன், சுதந்திரத்துடன் வாழும் போது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருசேர உயர்கிறது என்று கூறியுள்ளார்.
News January 26, 2026
‘ஜன நாயகன்’ H.வினோத்திற்கு விஜய் போட்ட ORDER!

‘ஜன நாயகன்’ மேல்முறையீட்டு வழக்கில் ஜன.27-ல் சென்னை HC தீர்ப்பு அளிக்கவுள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய அரசியல் வசனங்களை நீக்க வேண்டாம் என H.வினோத்திடம் விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றை நீக்கினால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என விஜய் கருதுவதாக கூறப்படுகிறது. அதேபோல, அந்த வசனங்கள் தனது அரசியல் பயணத்திற்கு பயன்படும் என விஜய் நம்புகிறாராம்.


